×

வதிலையில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

வத்தலக்குண்டு, ஏப். 14: வத்தலக்குண்டு அருகே விராலிபட்டியில் திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி முகவர்கள் பயிற்சி மற்றும் ஆய்வு கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கேபி முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் வரவேற்றார்.

கூட்டத்தில் விராலிப்பட்டி, எழுவனம்பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சிகளின் பூத் கமிட்டி முகவர்களுடன், தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்பியுமான கம்பம் செல்வேந்திரன் கலந்தாலோசித்தார். தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள் முருகேசன், முத்து, முத்துப்பாண்டி, மகேந்திரன், மகாமுனி, சகாபுதீன், சந்திரசேகரன், மணிவண்ணன், முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வதிலையில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Booth Committee ,Watilai ,Vathalakundu ,DMK ,Viralipatti ,Wattalakundu ,Booth ,Vatilai ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு அருகே கதிகலக்கியது இரட்டை மாட்டுவண்டி பந்தயம்